நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அருண் விஜய்க்கு வாழ்த்துசொன்ன சிவகார்த்திகேயன்

யானை படம் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் அருண் விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்துதெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 ஜூலை 2022, 11:20 am IST

யானை படம் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் அருண் விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்துதெரிவித்துள்ளார். 

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் இன்று (ஜூலை 1) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. உறவினர்களான இருவரும் முதன்முறையாக இணைந்துள்ளதால் யானை படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 

ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்க, கோபி நாத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, அம்மு அபிராமி, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்துகள் அண்ணா என பதிலளித்துள்ளார். 

இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரச்னை இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இருவரும் இயல்பாக சமூக வலைதளங்களில் உரையாடிக்கொள்வது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அருள்நிதியின் டி பிளாக் திரைப்படமும் இன்று வெளியாகவுள்ள நிலையில் அவருக்கும் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.