எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மணி ரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், ஜெயமோகன், ஜெயம் ரவி, கார்த்தி, சரத் குமார், த்ரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்பட படக்குழுவினர் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டார்கள். உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் விக்ரம் கலந்துகொள்ளவில்லை. இவ்விழாவின் புகைப்படங்களை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.