சமந்தா நடிக்கும் முற்றிலும் புதுமாதிரி தெலுங்கு த்ரில்லரான யசோதா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இன்னும் ஒரே ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டும்தான் பாக்கியிருக்கிறது. விரைவில் அதுவும் எடுக்கப்பட்டு விடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்துக்கான கிராபிக்ஸ் வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. வரும் 15 ஆம் தேதி டப்பிங் பணிகளும் தொடங்கவுள்ளன.
நூறு நாள்களில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுப் பணியாற்றியதாகத் தெரிவித்துள்ள படக்குழு, இந்தப் படத்தில் முற்றிலும் புதியதான கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் படத்தில் சமந்தாவின் ஆக் ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஹரி - ஹரீஷ் இயக்கத்திலான யசோதா திரைப்படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், மதுரிமா ஆகியோரும் நடித்துள்ளனர்.
மணி சர்மாவின் இசையில் தெலுங்கில் எடுக்கப்படும் இந்தப் படம், ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிக்கின்றனர்.
விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.