இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் வரப் போகிறார் நடிகர் விஜய் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் முதல்முதலாக இயக்குநராக அறிமுகமாகிறார் அட்லீ.
ஏற்கெனவே தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த இளைஞர் அட்லீ. எனவே, இந்தப் படத்தில் விஜய் தோன்றுவதில் வியப்பில்லை.
இதுபற்றி உறுதி செய்யப்பெற்றதும், அனேகமாக செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் விஜய்யும் ஷாருக் கானும் பங்கேற்கும் காட்சிகள் சென்னையில் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. லொகேஷன் முடிவு செய்யப்பட்டதும் செட் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.
இதையும் படிக்க | மீண்டும் 'ராஜா ராணி' கூட்டணி ? - நயன்தாராவின் 75வது படம் அறிவிப்பு
இந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஷாருக் கானுடன் நயன்தாரா நடித்த சில காட்சிகள் அண்மையில் மும்பையில் எடுக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
இதனிடையே, வில்லனாகக் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியும் யோகி பாபுவும்கூட இந்தப் படத்தில் இடம் பெறக் கூடும் என்றும் கோடம்பாக்கத்தில் வலுவாகப் பேசப்படுகிறது. ஆனால், இது பற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
2023 ஜூன் 2 ஆம் தேதி ஜவான் திரைப்படத்தை வெளியிடுவதெனத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ள 'பான் இந்திய' படமான ஜவான் திரைப்படத்துக்கு இசையமைப்பவரும் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்தான் - அனிருத்.
நடிகரும் இயக்குநருமான விஜய்யின் நண்பருமான பிரபுதேவா இயக்கத்தில் அக் ஷய் குமார் நடிப்பில் 2012-ல் ஹிந்தியில் வெளியான ரௌடி ரதோர் திரைப்படத்திலும் கௌரவத் தோற்றத்தில் விஜய் தோன்றினார் என்பது குறிப்பிடத் தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஜிங்க்யா ரஹானேதான் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர்: விராட் கோலி

இன்றைய ஜூலை 30 செய்திகள் - நேரலை!

காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!

அரசுக்கு எதிராகப் போராட வெளிநாட்டு நிதி வருகிறதா? சிஜேபி அபிஜீத் தீப்கே பதில்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



