நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரச்சிதா விவாகரத்து எப்போது?

சினிமா நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் பலத்திற்கு சற்றும் குறைவில்லாத படைபலம் கொண்டவர்கள் சீரியல் நடிகைகள். 

News image
Updated On :14 ஜூலை 2022, 6:34 pm IST

சினிமா நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் பலத்திற்கு சற்றும் குறைவில்லாத படைபலம் கொண்டவர்கள் சீரியல் நடிகைகள். 

அந்த வகையில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலட்சுமி. பெங்களூரில் பிறந்த இவர் கன்னடத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றியபின் கடந்த 2011 ஆண்டு விஜய் டிவியில்  ஒளிப்பரப்பான  'பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் தமிழர்களுக்கு அறிமுகமானார்.

பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமானார். அதற்கடுத்து ’நாம் இருவர் நமக்கு இருவர் 2’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அதிலிருந்து விலகி கன்னடத்தில் ‘பாரிஜாதா’ மற்றும் தமிழில் ‘உப்புக் கருவாடு’ ஆகிய படங்களில் நடித்தார்.

Story image

ஆனால், வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியாததால் மீண்டும் சின்னத்திரைக்கு வந்து ஜீ தமிழில்  ‘நாச்சியார்புரம்’ தொடரில் நடித்தார். தற்போது கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘இது சொல்ல மறந்த கதை’ தொடரில் நடித்து வருகிறார்.

‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் தினேஷ்  மீது ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதில் கடந்த 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் விவாகரத்து பெறவில்லை. இதற்கிடையே ரச்சிதா சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். 

கணவர் தினேஷுடன்

கணவர் தினேஷுடன்

இந்நிலையில், ரச்சிதா விரைவில் இயக்குநர் ஒருவரை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரச்சித்தா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்கள் யார் அந்த இயக்குநர் எனத் தேட ஆரம்பித்துவிட்டனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.