ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

வெளியானது தனுஷின் 'வாத்தி' பட முதல் பார்வை - டீசர் ?

தனுஷ் நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

News image
Updated On :27 ஜூலை 2022, 12:44 pm IST

தனுஷ் நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு தெலுங்கில் சார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தெலுங்கில் தனுஷின் வேலையில்லாத பட்டதாரி மற்றும் மாரி படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தெலுங்கிலும் சார் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Story image

இந்தப் படத்தில் தனுஷ் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

 இந்தப் படத்தின் டீசர் நாளை (ஜூலை 28) மாலை 6 மணிக்கு வெளியாகும் என இந்தப் படத்தை தயாரித்துவரும் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.