வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

‘அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா..’ : விக்ரம் குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

விக்ரம் திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியான எண்ணத்தை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார்.

News image
Updated On :4 ஜூன் 2022, 4:41 pm IST

விக்ரம் திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியான எண்ணத்தை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார்.

மிகுந்த  எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிரடியான சண்டைக்காட்சிகளும் சில திருப்புமுனைகளும் நிறைந்த இப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்கிற கதாப்பாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

படத்தைப் பற்றிய விமர்சனங்களிலும் ரசிகர்களின் பார்வையிலும் நடிகர் சூர்யாவின் தோற்றமும் உடல்மொழியும் பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது.  

இந்நிலையில், நடிகர் சூர்யா தன் டிவிட்டர் பக்கத்தில் “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா, எப்படி சொல்றது? உங்களுடன் திரையில் நடிக்கும் கனவு நனவானது. இதை செய்துகாட்டிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. இத்தனை அன்பைப் பார்க்கும்போது திளைப்படைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.