25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :6 பிப்ரவரி 2024, 6:16 pm IST

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பை பாந்த்ராவில் சல்மான் கான், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சல்மான் கானின் தந்தை சலீம் கான், வழக்கமாக பாந்தரா கடற்கரையில் நடைபயிற்சி செய்வார். இவரின் பாதுகாப்பிற்கு இரண்டு காவலர்கள் உடன் செல்வார்கள்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சலீம் கான் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு அங்குள்ள ஓர் இருக்கையில் அமரும்போது கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தில், “பாடகர் சித்து மூஸேவாலா நிலைதான் உங்களுக்கும் ஏற்படும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மும்பை பாந்தரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சல்மான் கான் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஞ்சாபில் உள்ள மான்ஸா மாவட்டத்தில் பிரபல பாடகர் சித்து மூஸேவாலா(27) மே 30ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சித்து கொலைக்கு காரணமாக உள்ள லாரன்ஸ் பிஸ்னோய், கடந்த 2018ஆம் ஆண்டு சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்த நிலையில், பாடகர் சித்து கொலைக்கு பிறகு சல்மான் கானுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது உண்மையிலேயே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.