குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

''பலாப்பழ பிரியாணி...'' விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் பரிமாறப்படும் உணவுகள்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் பரிமாறப்படும் உணவுப்பட்டியல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :9 ஜூன் 2022, 5:35 pm IST

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் இன்று (ஜூன் 9) காலை மாமல்லபுரத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிருத், இயக்குநர் அட்லி, சரத் குமார், ராதிகா, விஜய் சேதுபதி, கார்த்தி, தயாரிப்பாளர் போனி கபூர், தொகுப்பாளர் திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மேற்பார்வையில் திருமணம் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

Story image

இந்த நிலையில் திருமண நிகழ்வின்போது பரிமாறப்படும் உணவுகள் கொண்ட உணவு பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், பலாப்பழ பிரியாணி, பொன்னி அரிசி சாதம், பருப்பு கறி, அவியல், சேனைக் கிழங்கு வருவல், வாழைக்காய் வருவல், கேரட் மற்றும் பீன்ஸ் பொறியல், சாம்பார் சாதம், பனீர் பட்டாணி கறி, காளான் மிளகு வருவல், தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.