12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விக்ரம் வெற்றி: கமல், சிரஞ்சீவி, சல்மான்கான், லோகேஷ் கனகராஜ் சந்திப்பு

‘விக்ரம்’ படத்தை பார்த்த சிரஞ்சீவி, சல்மான்கான் ஆகியோர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து கூறினர். 

படம்: டிவிட்டர், லோகேஷ் கனகராஜ்| சிரஞ்சீவி, கமல்ஹாசன், சல்மான்கான் உடன் லோகேஷ் கனகராஜ்

Published On :

‘விக்ரம்’ படத்தை பார்த்த சிரஞ்சீவி, சல்மான்கான் ஆகியோர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து கூறினர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வசூலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் சிரஞ்சீவி தனது வீட்டில் சல்மான்கான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் கமல்ஹாசன்  ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது டிவிட்டர் பக்கத்தில், “எனது வீட்டில் இயக்குநர்    லோகேஷ் கனகராஜ், சல்மான் கான் அவர்களுடன் ‘விக்ரம்’ படத்தின் அபாரமான வெற்றியை கொண்டாடவும் கௌரவிக்கவும் எனது இனிய பழைய நண்பர் கமலை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி. இப்படம் தீவிரமான திரில்லர் படம். நண்பனுக்கு வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்” என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.