தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

நடிகர் விஜய்க்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்திய கமல்

நடிகர் விஜய்யை தொலைபேசி வாயிலாக அழைத்து நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:17 pm IST

நடிகர் விஜய்யை தொலைபேசி வாயிலாக அழைத்து நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் தனது 48வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் தற்போது நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பார்வை போஸ்டர்கள் வெளியானது. முதல் போஸ்டர் ரசிகர்களைப் பெரிதும் கவராத நிலையில், தற்போது வெளியான இரண்டாவது போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

நடிகர் விஜய்க்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துதெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக நடிகர் விஜய்யை தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்படவில்லை. விக்ரம் வெற்றிவிழாவில் பேசிய கமல், லோகேஷின் அடுத்தப் படத்துக்கு (தளபதி 67) உதவ தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.