நடிகை பானுபிரியாவின் தங்கையும் நடிகையுமான நிசாந்தி என்கிற சாந்தி பிரியா ராமராஜன் நாயகனாக நடித்த 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சாந்தி பிரியா நடிக்கிறார்.
இதையும் படிக்க | ஹிந்தியில் ரீமேக்காகும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா படம்
இதுகுறித்து சாந்தி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தியாவை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்த, தடைகளை உடத்தை ஒருவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். என்னால் முடிந்தவரை அவரது வேடத்துக்கு நியாயம் செய்வேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.