28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் ராமராஜன் பட நடிகை

நடிகை சாந்தி பிரியா நீண்ட இடைவேளைக்கு பிறகு சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவிருக்கிறார்.  
28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் ராமராஜன் பட நடிகை

நடிகை பானுபிரியாவின் தங்கையும் நடிகையுமான நிசாந்தி என்கிற சாந்தி பிரியா ராமராஜன் நாயகனாக நடித்த 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சாந்தி பிரியா நடிக்கிறார். 

இதுகுறித்து சாந்தி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தியாவை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்த, தடைகளை உடத்தை ஒருவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். என்னால் முடிந்தவரை அவரது வேடத்துக்கு நியாயம் செய்வேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com