உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

அடிவாங்கும் ஹிந்தி பான் இந்தியா படங்கள்!

அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'ராம் சேது' படம் ரூ. 75 கோடி மட்டுமே வசூல்செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:22 pm IST

அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'ராம் சேது' படம் ரூ. 75 கோடி மட்டுமே வசூல்செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ராம் சேது’. ஜாக்லீன் பெர்னான்டஸ், நுஷ்ரத் பாருச்சா, சத்ய தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ராமர் பாலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படம் ரூ. 90 கோடி செலவில்  எடுக்கப்பட்ட நிலையில் ரூ. 75 கோடி வசூலுடன் நின்றுவிட்டது. இதனால் ரூ. 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் ஹிந்தியில் உருவான பான் இந்தியா படங்கள் பெரிதாக வசூல் செய்யவில்லை. ரன்பீர் கபூர் நடிப்பில் ரூ. 160 கோடி செலவில் தயாரான சம்ஷேரா படம் ரூ.70 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

அதுபோல அமீர்கானின் லால் சிங் சத்தா ரூ.200 கோடி செலவில் தயாரான நிலையில் ரூ. 50 கோடி கூட வசூல் செய்யவில்லை. இத்துடன் தற்போது அக்ஷய் குமார் படமும் இனைந்துள்ளது. 

ஹிந்தி பான் இந்தியா படங்களுக்கு தென் திரையுலகில் மார்க்கெட் குறைந்துவருவதாக பேசப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.