அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

ஆமிர் கான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!

ஆமிர் கானின் மகள் ஐரா கானுக்கும் அவரது நீண்டநாள் காதலர் நுபூர் சிகாருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

News image
Updated On :19 நவம்பர் 2022, 11:16 am IST

1986-ல் நடிகை ரீனா தத்தாவைத் திருமணம் செய்தார் ஆமிர் கான். இவர்களுக்கு ஜுனைத் என்கிற மகனும் ஐரா என்கிற மகளும் உள்ளார்கள். 2002-ல் விவாகரத்து பெற்று ஆமீர் கானும் ரீனா தத்தாவும் பிரிந்தார்கள். லகான் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவை 2005-ல் திருமணம் செய்தார் ஆமிர் கான். 2011-ல் ஆசாத் ராவ் கான் என்கிற மகன் பிறந்தார். 15 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிவதாக ஆமிர் கானும் கிரண் ராவும் கடந்த வருடம் அறிவித்தார்கள்.

ஃபிட்னஸ் பயிற்சியாளர் நுபூர் சிகாரைக் காதலித்து வந்தார் ஐரா கான். தனது காதலரைத் திருமணம் செய்வதற்கு சம்மதம் அளித்து விடியோவை இன்ஸ்டகிராமில் அவர் பகிர்ந்திருந்தது வைரலானது. 

இந்நிலையில் நேற்று அவர்களுக்கு குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கலந்துக் கொண்டார் ஆமிர்கான். 

அவரது நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. சமீபத்தில்அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால் இனி ஓரிரு ஆண்டுகளுக்கு நடிக்க போவதில்லை என கூறியிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.