மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

ஜீ தமிழ் சீரியலில் அறிமுகமான பிக்பாஸ் ஜூலி!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஜூலி தற்போது சின்னத் திரை தொடர்களில் களமிறங்கியுள்ளார். 

கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடிகை ஜூலி

Published On :

சின்னத்திரையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஜூலி தற்போது சின்னத் திரை தொடர்களில் களமிறங்கியுள்ளார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரில், ஜூலி சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பலரின் கவனத்தையும் ஈர்த்த ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் விளைவாக பிரபலமானார். 

Story image

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்று ஜூலி நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

கடந்த சில நாள்களாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்த ஜூலி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடிக்கத் தொடங்கியுள்ளார். 

Story image

ஜீ தமிழில் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொடரில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

அவர் நடிப்பில் உருவான எபிஸோடுகள் இந்த வாரம் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், ஜூலி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.