பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்கில் கண்டுகளித்த படக்குழுவினர் (விடியோ)

சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து படத்தைக் கண்டுகளித்துள்ளார்கள்.
பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்கில் கண்டுகளித்த படக்குழுவினர் (விடியோ)

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது. 

பொன்னியின் செல்வன் படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர், சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து படத்தைக் கண்டுகளித்துள்ளார்கள். மணி ரத்னம், ஐஸ்வர்யா ராய் உள்பட படக்குழுவினர் மீண்டும் இணைந்த இந்த நிகழ்வின் விடியோ வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com