தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நடிகைகள் பார்வதி, நித்யா மேனன் கர்ப்பமா? அவர்கள் பகிர்ந்த புகைப்படத்திற்கான காரணம் என்ன? 

நடிகை பார்வதி மற்றும் நித்யா மேனன் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக தங்களது சமூக வலைதளங்களில் கர்ப்ப பரிசோதனை புகைப்படத்தினை பகிர்ந்தது வைரலானது. 

Published On :

நடிகை பார்வதி மற்றும் நித்யா மேனன் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக தங்களது சமூக வலைதளங்களில் கர்ப்ப பரிசோதனை புகைப்படத்தினை பகிர்ந்தது வைரலானது. 

பார்வதியின் நடிப்பில் வெளியான ‘புழு’ திரைப்படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. அடுத்த பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். அதே போல் நித்யா மேனன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் 100 கோடிக்கு மேல் வசூலாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

Story image

இந்நிலையில், பார்வதி திருவோத்து மற்றும் நித்யா மேனன் இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் கர்ப்ப பரிசோதனை தொகுப்பு முடிவுகள் அடங்கிய புகைப்படத்தினை பதிவிட்டனர். இருவருக்குமே திருமணம் நடைபெறாததால் ரசிகர்கள் குழப்பமும் அதிர்ச்சியுமடைந்தனர். சில நண்பர்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். 

Story image

இருவரும் கர்ப்பமாக இல்லை. இது புதிய படத்திற்கான விளம்பரம் என்று பின்னர் தெரிவித்தனர். அஞ்சலி மேனன் இயக்கும் புதிய தமிழ் படத்திற்கான விளம்பரமாக இதை செய்துள்ளனர். இந்தப் படத்தில் பார்வதி, நித்யா இருவரும் கர்ப்பிணிப் பெண்களாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் இதற்கு ‘வண்டர் வுமன்’ என இருக்கலாம் என தகவல்கள் சமூக வலைதளங்களில் உலவுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.