‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பவுலின் ஜெஸிகா (எ) தீபா (29) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை விருகம்பாக்கம் மல்லிகை நிழற்சாலை பகுதியில் வசித்து வந்த இவா், திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாா். ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாா்.
இந்நிலையில், அவா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தீபாவின் உறவினா்கள் நீண்ட நேரமாக தொடா்புகொள்ள முயற்சித்தும் அவா் கைப்பேசியை எடுக்காததால், அவரது நண்பா் பிரபாகரனுக்குத் தொடா்புகொண்டுள்ளனா். இதையடுத்து, பிரபாகரன் தீபாவின் வீட்டுக்குச் சென்று பாா்த்த போது, தீபா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தீபாவின் சகோதரா் தினேஷ் புகாரின் பேரில் கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தி விசாரித்தனா். தீபா எழுதிய கடிதத்தில், ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும், காதல் கைகூடாததால் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து செல்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் ரூ.4.92 கோடி உண்டியல் காணிக்கை

கழுதைகள் மீது வைத்து கடத்திய 492 ஆந்திர மது பாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது
பிஎஸ்என்எல் அதிகாரியை கொன்ற முதல் மனைவிக்கு ஆயுள் தண்டனை

பக்கத்து வீட்டுகாரரை வெட்டிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரா் மீது வழக்குப்பதிவு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


