திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நடிகை தற்கொலை

‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பவுலின் ஜெஸிகா (எ) தீபா (29) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :19 செப்டம்பர் 2022, 1:16 am IST

‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பவுலின் ஜெஸிகா (எ) தீபா (29) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை நிழற்சாலை பகுதியில் வசித்து வந்த இவா், திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாா். ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாா்.

இந்நிலையில், அவா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தீபாவின் உறவினா்கள் நீண்ட நேரமாக தொடா்புகொள்ள முயற்சித்தும் அவா் கைப்பேசியை எடுக்காததால், அவரது நண்பா் பிரபாகரனுக்குத் தொடா்புகொண்டுள்ளனா். இதையடுத்து, பிரபாகரன் தீபாவின் வீட்டுக்குச் சென்று பாா்த்த போது, தீபா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தீபாவின் சகோதரா் தினேஷ் புகாரின் பேரில் கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தி விசாரித்தனா். தீபா எழுதிய கடிதத்தில், ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும், காதல் கைகூடாததால் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து செல்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.