செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

பிக் பாஸ்: 6-வது முறையாகத் தொகுத்து வழங்கும் கமல்!

ஆறாவது முறையாக நடிகர் கமல் ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். 

Published On :1 பிப்ரவரி 2024, 3:56 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. 

இந்நிலையில் பிக் பாஸ் பருவம் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 முதல் தொடங்கவுள்ளதாக விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. முதல் நாள் நிகழ்ச்சி மாலை ஆறு மணிக்குத் தொடங்குகிறது. ஆறாவது முறையாக நடிகர் கமல் ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

அரசியல், நடிப்பு, தயாரிப்பு எனப் பல வேலைகளில் மும்முரமாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலிருந்து கமல் பின்வாங்குவதில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களைச் சென்றடைவது அரசியலுக்கும் திரைப்படத்துறைக்கும் உதவும் என அவர் நம்புகிறார். அதனால் தான் விக்ரம் படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார். 

இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி ராஜலட்சுமி செந்தில், நடிகை ஷில்பா மஞ்சுநாத், டிவி நடிகை ரோஷிணி, தர்ஷா குப்தா, அஸ்வின் குமார், ரவிந்தர் - மகாலட்சுமி ஜோடி எனப் பல பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் ராஜு வென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.