தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

’தியேட்டர்ல இப்படி பண்ணாதீங்க..’ இயக்குநர் கௌதம் வாசுதேவ் வேதனை

திரையரங்கம் சென்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் கோரிக்கை வைத்துள்ளார்.

News image
கெளதம் வாசுதேவ் மேனன்
Updated On :30 செப்டம்பர் 2022, 10:07 am

DIN

திரையரங்கம் சென்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் கோரிக்கை வைத்துள்ளார்.

சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

நீண்ட நாள் கழித்து கௌதம் வாசுதேவ் - சிம்பு - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் இப்படம் உருவாகியிருந்தது.

இந்நிலையில், இயக்குநர் கௌதம் மேனன் சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றிற்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தார்.

அப்போது, இப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கௌதம் மேனன் ‘மல்லிப்பூ பாடலை ஒரு பெண்ணை ஆட வைத்து காட்சிபடுத்துவதற்குப் பதிலாக ஏன் ஆண்களையே ஆட வைக்கக்கூடாது என நினைத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  மேலும், திரையரங்கம் செல்லும் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த படத்தின் 15 - 20 வினாடி காட்சிகளை செல்போனில் படம்பிடித்து இணையத்தில் பகிர்கிறார்கள். இது தவறான செயல். புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், இப்படி காட்சிகளை பதிவு செய்து பரப்ப வேண்டாம். ஒரு சினிமாவை உருவாக்க பலரின் உழைப்பும் ஈடுபாடும் அதிகம் தேவைப்படுகிறது.’ என வேதனையாக கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.