புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

செவ்வந்தி சீரியலில் நுழையும் சந்திரலேகா தொடர் நடிகை

செவ்வந்தி சீரியலில் சந்திரலேகா தொடர் நடிகை நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2023, 11:56 am IST

செவ்வந்தி சீரியலில் சந்திரலேகா தொடர் நடிகை நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி தொடரான 'செவ்வந்தி' சீரியல் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. பார்வையாளர்களை  மேலும் அதிகரிக்க, தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். 

இந்த நிலையில் செவ்வந்தி சீரியலில் சந்திரலேகா தொடர் புகழ் சந்தியா ஜாகர்லமுடி விரைவில் இணையவுள்ளார். இத்தொடரில் சந்தியா  சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. 

நடிகை சந்தியா ஜகர்லமுடி பேசுகையில், “செவ்வந்தி போன்ற அற்புதமான சீரியலில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வினோத், அழகு, ஜெயந்தி நாராயணன் போன்ற சிறந்த நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பை வழங்கியதற்கு இயக்குநர் ஓ.என்.ரத்தினம் அவர்களுக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக, நான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறந்த நடிப்பை கொடுப்பேன் மற்றும் தொடர்ந்து ஆதரவளிப்பேன்” என்று தெரிவித்தார்.

சந்தியா ஜகர்லமுடியின் முதல் தொலைக்காட்சி தொடர் 'வம்சம்,'. இந்த தொடரை சி.ஜே.பாஸ்கர் இயக்கி தயாரித்தார். இவர் ‘சந்திரலேகா’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அந்த தொடரில், சந்தியா ஜாகர்லமுடி ‘பிருந்தா’ என்ற கேரக்டரில் நடித்து, ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.