செவ்வந்தி சீரியலில் சந்திரலேகா தொடர் நடிகை நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி தொடரான 'செவ்வந்தி' சீரியல் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. பார்வையாளர்களை மேலும் அதிகரிக்க, தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் செவ்வந்தி சீரியலில் சந்திரலேகா தொடர் புகழ் சந்தியா ஜாகர்லமுடி விரைவில் இணையவுள்ளார். இத்தொடரில் சந்தியா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
நடிகை சந்தியா ஜகர்லமுடி பேசுகையில், “செவ்வந்தி போன்ற அற்புதமான சீரியலில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வினோத், அழகு, ஜெயந்தி நாராயணன் போன்ற சிறந்த நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பை வழங்கியதற்கு இயக்குநர் ஓ.என்.ரத்தினம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக, நான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறந்த நடிப்பை கொடுப்பேன் மற்றும் தொடர்ந்து ஆதரவளிப்பேன்” என்று தெரிவித்தார்.
சந்தியா ஜகர்லமுடியின் முதல் தொலைக்காட்சி தொடர் 'வம்சம்,'. இந்த தொடரை சி.ஜே.பாஸ்கர் இயக்கி தயாரித்தார். இவர் ‘சந்திரலேகா’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அந்த தொடரில், சந்தியா ஜாகர்லமுடி ‘பிருந்தா’ என்ற கேரக்டரில் நடித்து, ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கலாம் வாங்க!
நீட் மாணவி தற்கொலை! பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் அடுக்கடுக்கான கேள்விகள்!
உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைப்பதைத் தடுக்க வலியுறுத்தல்: உதயநிதி

மமதாவிடம் இருந்து திரிணமூலை கைப்பற்றும் ரிதப்ரதா பானர்ஜி! யார் இவர்?
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி



