

நடிகா் ரஜினிகாந்த், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பின்னா் இமயமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். கடந்த 2010-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்வதைத் தவிா்த்து வந்த அவா், ‘காலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னா் கடந்த 2019-இல் இமயமலை பயணத்தை மேற்கொண்டாா்.
ஜெயிலா் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, தற்போது மீண்டும் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவா் 7 நாள்கள் அங்கு தங்கியிருந்து பாபாஜி குகை, கேதா்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல உள்ளாா்.
இதையும் படிக்க: ஜெயிலர் - முதல்நாள் பிரம்மாண்ட வசூல் சாதனை!
இந்நிலையில், ஆன்மீக தலங்களுக்கு செல்லும் முன் ரஜினிகாந்த் அங்குள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று குருக்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதுடன் அவர்களின் ஆன்மீக உரைகளைக் கேட்டு அவரும் சிறப்புரை ஆற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.