அஜித்தின் விடாமுயற்சி குறித்து வெளியான புதிய தகவல்!

அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அஜித்தின் விடாமுயற்சி குறித்து வெளியான புதிய தகவல்!
Published on
Updated on
1 min read

அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு  அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

மேலும், அந்த படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைக்கப்பட்டது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு புணேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.  ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.  

இந்த நிலையில், நேற்று சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படம் குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும், தங்களுக்கு இப்படம் முக்கியமானது எனவும், இனி தாமதமாகாது என்றும் சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலைக் கேட்டு அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com