நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அகோரி படத்தின் நாயகனாக ராஜா ராணி தொடர் பிரபலம்!

அகோரி படத்தின் நாயகனாக ராஜா ராணி தொடர் பிரபலம் சித்து நடித்துள்ளார்.

News image
Updated On :12 டிசம்பர் 2023, 12:38 pm IST

அகோரி படத்தின் நாயகனாக ராஜா ராணி தொடர் பிரபலம் சித்து நடித்துள்ளார்.

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்து. இவர் திருமணம், ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் இவர் நடித்த ராஜா ராணி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்தொடரில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை இவர் உருவாக்கினார்.

இந்த நிலையில், நடிகர் சித்து தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். இவர் அகோரி எனப் பெயரிடப்பட்டுள்ள தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார்.

இப்படத்தை டிஎஸ் ராஜ்குமார் இயக்கியுள்ளார். மோஷன் பிலிம் பிக்சர்ஸ் சார்பில் சுரேஷ் கே. மேனன் இப்படத்தை தயாரித்துள்ளார். 

அகோரி படத்துக்கு  யூ / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் டிச. 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.