அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த காந்தாரா புகழ் நடிகர்

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தனது சொந்த ஊரான கெரடியில் உள்ள அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார். 
அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த காந்தாரா புகழ் நடிகர்

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தனது சொந்த ஊரான கெரடியில் உள்ள அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார். 

‘காந்தாரா’ படம் மூலம் பட்டித்தொட்டி எங்கும் புகழ் பெற்ற நடிகராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர், ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை வாயிலாக தனது சொந்த ஊரான கெரடியில் உள்ள அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார்.

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த 2018ல் வெளியான "சர்காரி ஹி" என்கிற படம் கன்னட பள்ளிகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதற்காக இந்த படம் சிறந்த குழந்தைகள் படத்துக்கான தேசிய விருதையும் வென்றது. ரிஷப் ஷெட்டி. தற்போது கந்தாரா இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com