மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த காந்தாரா புகழ் நடிகர்

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தனது சொந்த ஊரான கெரடியில் உள்ள அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார். 

News image
Updated On :18 டிசம்பர் 2023, 1:24 pm

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தனது சொந்த ஊரான கெரடியில் உள்ள அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார். 

‘காந்தாரா’ படம் மூலம் பட்டித்தொட்டி எங்கும் புகழ் பெற்ற நடிகராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர், ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை வாயிலாக தனது சொந்த ஊரான கெரடியில் உள்ள அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார்.

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த 2018ல் வெளியான "சர்காரி ஹி" என்கிற படம் கன்னட பள்ளிகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதற்காக இந்த படம் சிறந்த குழந்தைகள் படத்துக்கான தேசிய விருதையும் வென்றது. ரிஷப் ஷெட்டி. தற்போது கந்தாரா இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.