இயக்குநர் பா.இரஞ்சித் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ அடுத்தாண்டு திரைக்கு வருகிறது. மிகப்பெரிய பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் உலகத் திரைப்பட விழாகளுக்கும் செல்ல உள்ளது.
இந்நிலையில், பா.இரஞ்சித் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார். சென்னையில் விரைவில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி துவங்க உள்ளதால் அதற்கான அழைப்பிதழைக் கொடுக்க சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.