கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் திரைப்படம் நாளை ( டிச.22 ) உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப்படத்தில் நடிகர் யஷ் நடித்ததுள்ளதை படத்தில் பணியாற்றிய பாடகியும், குழந்தை நட்சத்திரமுமான தீர்த்தா சுபாஷ் என்பவர் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
இதையும் படிக்க: நல்ல விமர்சனங்களைப் பெறும் டன்கி!
உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள இப்படம் முதல் நாள் வசூலில் ரூ.150 கோடியைத் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு ஆரம்பமாகிறது. மேலும், அம்மாநிலங்களில் டிக்கெட் விலையையும் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘பல கதையில்’ பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.