25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

அறிமுக இயக்குநருடன் கைகோக்கும் அதர்வா முரளி

அன்னை ஃபிலிம் புரொடக்ஷன் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில்அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா 'தணல்' எனும் திரைப்படத்தில் நடிக்கிறார்.

Published On :7 பிப்ரவரி 2024, 11:59 am IST

அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா 'தணல்' எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். 

நடிகர் அதர்வா முரளி, தமிழ்த் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார்.பல்வேறு மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வரும் அதர்வா 'பட்டத்து அரசன்' திரைப்படத்திற்குப் பிறகு தற்போது புதுமுக இயக்குநருடன் கைகோர்க்கிறார். தணல் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர்  தயாரிக்கிறார். 

'100', 'ட்ரிக்கர்' போன்ற படங்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக அதர்வா முரளி இத்திரைப்படத்தில் நடிக்கிறார். த்ரில்லர் கதையாக உருவாகி வரும் 'தணல்' படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்க அஷ்வின் காக்குமானு, ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.