'இருள் ஆளப்போகிறது': டிமாண்டி காலனி 2 படத்தின் அறிமுக விடியோ!

'டிமாண்டி காலனி 2' படத்தின் நடிகர்களை அறிமுகப்படுத்தும் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
'இருள் ஆளப்போகிறது': டிமாண்டி காலனி 2 படத்தின் அறிமுக விடியோ!

'டிமாண்டி காலனி 2' படத்தின் நடிகர்களை அறிமுகப்படுத்தும் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து, அருள்நிதி - பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. படத்தின் 40 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், டிமாண்டி காலனி 2 படத்தின் நடிகர்களை அறிமுகப்படுத்தும் விடியோவை இருள் ஆளப்போகிறது என்ற தலைப்பில் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இத்துடன் ‘புனிதமற்ற பழிவாங்கல்’ டேக்கும் டிரெண்டாகி வருகின்றது.

தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com