தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

முதல் நாளிலேயே வசூலில் சதமடித்த ஷாருக் கானின் பதான்!

ஷாருக் கான் நடித்த பதான் படம் முதல் நாளன்று உலகெங்கும் ரூ. 100 கோடி வசூலை அள்ளியுள்ளதாக...

News image
Updated On :26 ஜனவரி 2023, 2:04 pm IST

ஷாருக் கான் நடித்த பதான் படம் முதல் நாளன்று உலகெங்கும் ரூ. 100 கோடி வசூலை அள்ளியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் & ஷேகர். 

2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 240 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. 

பதான் படம் நேற்று (ஜனவரி 25) ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.

இந்நிலையில் பதான் படம் முதல் நாளன்று உலகெங்கும் ரூ. 100 கோடி வசூலை எட்டி அசத்தியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 54 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வார இறுதியில் இதன் வசூல் மேலும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.