செய்திகள்
கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறைவு செய்த சிவராஜ் குமார்!
கேப்டன் மில்லர் படத்தில் தனக்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளார் நடிகர் சிவராஜ் குமார்.
கேப்டன் மில்லர் படத்தில் தனக்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளார் நடிகர் சிவராஜ் குமார்.
நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், சிவராஜ் குமாருக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.