மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் சிம்பு 50! இயக்குநர் இவரா?
நடிகர் சிம்புவின் 50-வது படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் சிம்புவின் 50-வது படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முஃப்தி என்ற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக் 'பத்து தல' என்ற பெயரில் உருவாகிறது. இந்தப் படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது சிம்பு 48-வது படமாகும்.
இதையும் படிக்க: விரைவில் ’லால் சலாம்’ படப்பிடிப்பு
இதனைத் தொடர்ந்து, ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ படத்தை நடித்துக்கொடுத்தபின் சிம்புவின் 50வது படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...