இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

வெற்றியை விட அவமானம், தோல்விகளே அதிகம் கற்றுத் தருகிறது: விக்னேஷ் சிவன் 

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 12:13 pm IST

லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர் ஸ்கிரிப்ட் பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து அஜித் விலகுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

‘கழகத்தலைவன்’ படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் ஏகே62 இருக்குமெனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் ஏகே 62 படத்தினை நீக்கி விக்கி6 என மாற்றினார். மேலும் கவர் பிக்சரையும் மாற்றினார். அதில் ‘நெவர் கிவ் அப்’என்ற வாசகம் பதிந்துள்ளது. 

இந்நிலையில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் கூறியதாவது: 

Story image

என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !!!

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது! இதயத்திலிருந்து நேரடியாக எனது 6வது படத்தினை தொடங்குகிறேன். 

இந்த கடினமான நேரத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. இந்த அசாத்தியமான சூழலில் என் மீது வைத்த நம்பிக்கைகள் என்னை இக்கட்டான சூழலில் மீட்டெடுத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.