விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் முடிவடையும் தேதி வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் 'நம்ம வீட்டு பொண்ணு'. ஸ்டார் ஜல்சா என்ற வங்காள மொழித் தொடரான 'கோர்குடோ' என்ற தொடரின் மறு ஆக்கமாக உருவாகி வருகிறது.
நகைச்சுவை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில் சுர்ஜித் குமார், அஸ்வினி ஆனந்திதா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தத் தொடருக்கு எஸ்.மருது சங்கர், செல்வா வடிவேல், எஸ்.அசோக் குமார் ஆகியோர் வசனம் எழுத பிரவீன் பென்னட் இயக்குகிறார்.
இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இந்தத் தொடர் விரைவில் முடியவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முடிவடையும் தேதி வெளியாகியுள்ளது. இந்தத் தொடர் மார்ச் 18ஆம் தேதியுடன் நிறைவு பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.