அதிவேகமாக ரூ.100 கோடி வசூல்... கேரளத்தைக் கலக்கும் 2018!

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவான 2018 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது.
அதிவேகமாக ரூ.100 கோடி வசூல்... கேரளத்தைக் கலக்கும் 2018!

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவான 2018 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது.

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது.

இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப். 

கேரளத்தில் மே 5 ஆம் தேதி வெளியான இப்படம் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலைக் கடந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட படத்தயாரிப்பு நிறுவனம் பணிகளைத் துவங்கியுள்ளது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com