நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த வானத்தைப் போல!

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கயல் - எதிர்நீச்சல் ஆகிய இரு தொடர்கள் மட்டுமே டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டன.

News image
Updated On :1 நவம்பர் 2023, 5:56 pm IST


சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் வானத்தைப் போல தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

சன் தொலைக்காட்சியில் பல முதன்மைத் தொடர்கள்  ஒளிபரப்பாகிவருகின்றன. அவற்றில் வானத்தைப்போல தொடரும் ஒன்று. இதுவரை டாப் 5 இடங்களில் ஒன்றாக இருந்த வானத்தைப்போல தொடர், இந்த வாரம் பட்டியலில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கயல் - எதிர்நீச்சல் ஆகிய இரு தொடர்கள் மட்டுமே டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டன. ஒருகட்டத்தில் எதிர்நீச்சல் தொடர் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. 

இதனிடையே இந்த வாரம் வெளியாகியுள்ள டிஆர்பி பட்டியலில் வானத்தைப்போல தொடர் 10.40 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 

Story image

அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடர், திருமணம் ஆன பிறகு அண்ணன், தங்கை உறவு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவரிக்கிறது. ஸ்ரீகுமார், மான்யா, அஷ்வந்த் கார்த்தி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 8 மணிக்கு வானத்தைப்போல தொடர் ஒளிபரப்பாகிறது.  நீண்ட மாதங்களுக்குப் பிறகு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.