வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சுழல் 2-ம் பாகத்தில் கெளரி கிஷன்!

நடிகர் கதிர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சுழல் 2-ஆம் பாகத்தில் நடிகை கெளரி கிஷன் இணையவுள்ளார்.

News image
Updated On :16 அக்டோபர் 2023, 1:41 pm IST

நடிகர் கதிர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சுழல் 2-ஆம் பாகத்தில் நடிகை கெளரி கிஷன் இணையவுள்ளார்.

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான இணையத் தொடர் சுழல். புஷ்கர் - காயத்ரி தயாரித்தனர்.

அமேசான் பிரைம் ஓடிடியில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி வெளியான இந்த இணையத் தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

சாம்பலூர் என்ற மலைக் கிராமத்தில் வசிக்கும் சிறுமி மாயமாகிறார். அவரை கண்டுபிடிக் ககாவல் துறை ஆய்வாளராக வரும் கதிர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். இதனை மையமாகக் கொண்டு கிரைம் திரில்லராக எழுதப்பட்ட கதைதான் சுழல்.

இதற்கிடையே, இத்தொடரின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாக இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சுழல் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கெளரி கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கெளரி கிஷன், 96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாகவும், மாஸ்டர், கர்ணன், அடியே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.