25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

சுழல் 2-ம் பாகத்தில் கெளரி கிஷன்!

நடிகர் கதிர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சுழல் 2-ஆம் பாகத்தில் நடிகை கெளரி கிஷன் இணையவுள்ளார்.

Published On :2 பிப்ரவரி 2024, 8:39 am IST

நடிகர் கதிர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சுழல் 2-ஆம் பாகத்தில் நடிகை கெளரி கிஷன் இணையவுள்ளார்.

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான இணையத் தொடர் சுழல். புஷ்கர் - காயத்ரி தயாரித்தனர்.

அமேசான் பிரைம் ஓடிடியில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி வெளியான இந்த இணையத் தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

சாம்பலூர் என்ற மலைக் கிராமத்தில் வசிக்கும் சிறுமி மாயமாகிறார். அவரை கண்டுபிடிக் ககாவல் துறை ஆய்வாளராக வரும் கதிர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். இதனை மையமாகக் கொண்டு கிரைம் திரில்லராக எழுதப்பட்ட கதைதான் சுழல்.

இதற்கிடையே, இத்தொடரின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாக இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சுழல் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கெளரி கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கெளரி கிஷன், 96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாகவும், மாஸ்டர், கர்ணன், அடியே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.