பெரும் ஆதரவுக்கு நன்றி: மடோனா செபாஸ்டியன் நெகிழ்ச்சி!
பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றவரும் ஆவார். தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் அது மேலும் கூடியது. பின்னர் அவர் நடித்த தமிழ்ப்படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜுக்கு ஹெலிகாப்டர் உறுதி!
உலகளவில் 6000 திரைகளில் வெளியான லியோ முதல்நாள் வசூலாக ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: சம்பளம் போதும்; பட வெற்றிக்காக பரிசுகள் தேவையில்லை: நடிகர் விஜய்
லியோவில் நடிகை மடோனா செபாஸ்டியன் நடிப்பதாக ஆரம்பத்தில் பொய்யான தகவலாக இருந்த நிலையில் அவர் நிஜமாகவே நடித்திருப்பது ரசிர்களுக்கு விருந்தாக இருந்தது. குறைவான நேரம் இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரமாக நடித்திருந்தார்.
இதையும் படிக்க: லியோ ரூ.1,000 கோடி வசூலிக்காது: தயாரிப்பாளர் லலித்
பெரும் ஆதரவினை தொடர்ந்து நடிகை மடோனா செபாஸ்டியன் தனது எக்ஸ் பதிவில், “லியோவுக்காக எனக்கு வரும் அதீத பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. இந்த அற்புதமான அனுபவத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.