விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய தொடரின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள், ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த தொலைக்காட்சி தொடர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், டிஆர்பியில் பின் தங்கிய தொடர்களை முடிப்பது வழக்கம். அதன்படி, காற்றுக்கென்ன வேலி, கன்னே கலைமானே தொடரை தொடர்ந்து டிஆர்பியில் கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடரின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் சங்கரேஷ் குமார் மற்றும் சாய் காயத்ரி நடிக்கவுள்ளனர்.
இந்த தொடருக்கு, 'நீ நான் காதல்' என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்டார் மா தொலைக்காட்சியில் வெற்றி தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் உள்ளது. இந்த தொடரை தாய் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
இதையும் படிக்க: டிஆர்பி இல்லாததால் முடிவுக்குவரும் பிரபல சீரியல்!
சங்கரேஷ் குமார் முன்னதாக ரோஜா மற்றும் கோகுலத்தில் சீதை தொடரில் நடித்தவர். ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல தொடர்களில் சாய் காயத்ரி நடித்துள்ளார்.