தனுஷ் 50 படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவாவை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தனுஷ் அவரை அணுகியுள்ளார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிச.15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் தனுஷ், வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்கிறார். இதற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில், தனுஷ் 50 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தன்னை நடிக்க, நடிகர் தனுஷ் அணுகியதாக நேர்காணல் ஒன்றில் பிரபல இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மார்க் ஆண்டனி படத்தின் டிரெய்லர் வெளியானது!
அவர் கூறுகையில், “தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அவர் அழைத்தார். நான் எப்படி வில்லன் என கேட்டதற்கு, வடசென்னை மொழி உங்களவுக்கு எவராலும் பேச முடியாது என கூறினார். என்னால் நோட்ஸ் இல்லாம பாடவே முடியாது, வசனம் எப்படி பேசுவது” என கூறி நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.