சந்திரமுகி 2: ரஜினியிடம் நேரில் வாழ்த்து பெற்ற லாரன்ஸ்!

சந்திரமுகி-2 திரைப்படம் இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் வாழ்த்து பெற்றார்.
ரஜினியிடம் நேரில் வாழ்த்து பெற்ற லாரன்ஸ்
ரஜினியிடம் நேரில் வாழ்த்து பெற்ற லாரன்ஸ்
Updated on
1 min read

சந்திரமுகி-2 திரைப்படம் இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் வாழ்த்து பெற்றார்.

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. இரண்டாவது பாகத்தில் கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா புரடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சமீபத்தில் ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை - தோட்டா தரணி.  

சந்திரமுகி 2-ஆம் பாகத்தின் டிரைலர்கள் சமீபத்தில் வெளியான நிலையில், நாளை மறுநாள்(செப்.28) திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. 

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக முதல் பாகத்தில் நடித்த ரஜினியின் வீட்டிற்கு நேரில் சென்ற லாரன்ஸ், அவரிடம் வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த லாரன்ஸ், குருவே சரணம் எனவும், ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்தும், சந்திரமுகி-2 வெளியீட்டுக்கு ஆசியும் பெற்றதாக பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com