மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

விஜய் 68: யுவனுடன் களமிறங்கும் தமன்!

நடிகர் விஜய்யின் 68-வது படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து தமன் பணிபுரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் தமன்

Published On :

நடிகர் விஜய்யின் 68-வது படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து தமன் பணிபுரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்திற்குப் பின்,  விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், நாயகியாக ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் இசையமைப்பாளர் தமன் நேற்று புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் பாடிய பிறகு பேசிய தமன், “என் வாழ்க்கையில் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவரிடம் மட்டுமே இணைந்து ப்ரோகிராமராக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளேன். விரைவில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படத்துக்கு ப்ரோகிராமராக பணியாற்றவுள்ளேன்.” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா, வெங்கட் பிரபு இயக்கும் விஜய் படமா எனக் கேள்வி எழுப்ப, தற்போது ஏதும் சொல்ல முடியாது என்று தமன் கூறிவிட்டார்.

இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.