தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

நடிகர் பிரபாஸின் 24வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிமுக போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :30 டிசம்பர் 2023, 10:28 am IST

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. 

Story image

சலார் படத்துக்குப் பிறகு கல்கி படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரபாஸின் 24வது படத்தின் தலைப்பு, முதல் தோற்றப் பார்வை போஸ்டர் வரும் பொங்களுக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

படத்தில் நடித்துள்ள மற்றவர்கள் குறித்து படக்குழு விவரங்களை எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தினை மருதி இயக்கி வருகிறார். 

Story image

பிரபாஸின் 25வது படம் அனிமல் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.