

நடிகர் ஷாருக்கான் நயன்தாரா வீட்டிற்குச் சென்றுள்ளார்.
தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தற்போது, இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத் தீவிரமாக படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜவான் படப்பிடிப்பிற்காக சென்னை வந்த நடிகர் ஷாருக்கான் நயன்தாராவின் குழந்தைகளை பார்க்க அவருடைய வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க: பார்க்க வேண்டிய 10 'காதல்’ திரைப்படங்கள்!
திரைப்பட இயக்குநா் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா திருமணம் கடந்தாண்டு ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 4-ஆவது மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் - நயன் ஜோடி அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவா்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.