திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

நடிகை அனுஷ்கா அரிய வகை நோயால் அவதியா?

தென்னிந்திய திரையுல முன்னணி நடிகையான அனுஷ்கா அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருவதாக வெளியாகி உள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 11:47 am IST

தென்னிந்திய திரையுலக முன்னணி நடிகையான அனுஷ்கா அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருவதாக வெளியாகி உள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சமீப காலங்களாக முன்னணி நடிகைகள் பலர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை நோய்கள் குறித்து வெளிப்படையாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். 

அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். 

இவரைத் தொடர்ந்து நடிகை மம்தா மோகன் தாஸ், தன்னுடைய நிறம் மாறி வரும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், நடிகை ஸ்ருதி ஹாசன், பூனம் கவுர் போன்ற நடிகைகளும் தங்களுடைய நோய் பாதிப்புகள் குறிந்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது பிரபல நடிகை அனுஷ்கா தான் அரிய வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, எனக்கு அரிதான சிரிக்கும் நோய் உள்ளது. சிரிப்பது எல்லாம் ஒரு நோயா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், சிரிக்க வேண்டிய சூழ்நிலையில் நான் சிரிக்க ஆரம்பித்தால் அதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன் என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். 

மேலும், படப்பிடிப்பில் சிரிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை சிரிப்பேன், அப்போது படப்பிடிப்பைக் கூட நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

நடிகை அனுஷ்காவின் இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.