பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

நடிகை அனுஷ்கா அரிய வகை நோயால் அவதியா?

தென்னிந்திய திரையுல முன்னணி நடிகையான அனுஷ்கா அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருவதாக வெளியாகி உள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 11:47 am IST

தென்னிந்திய திரையுலக முன்னணி நடிகையான அனுஷ்கா அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருவதாக வெளியாகி உள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சமீப காலங்களாக முன்னணி நடிகைகள் பலர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை நோய்கள் குறித்து வெளிப்படையாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். 

அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். 

இவரைத் தொடர்ந்து நடிகை மம்தா மோகன் தாஸ், தன்னுடைய நிறம் மாறி வரும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், நடிகை ஸ்ருதி ஹாசன், பூனம் கவுர் போன்ற நடிகைகளும் தங்களுடைய நோய் பாதிப்புகள் குறிந்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது பிரபல நடிகை அனுஷ்கா தான் அரிய வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, எனக்கு அரிதான சிரிக்கும் நோய் உள்ளது. சிரிப்பது எல்லாம் ஒரு நோயா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், சிரிக்க வேண்டிய சூழ்நிலையில் நான் சிரிக்க ஆரம்பித்தால் அதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன் என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். 

மேலும், படப்பிடிப்பில் சிரிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை சிரிப்பேன், அப்போது படப்பிடிப்பைக் கூட நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

நடிகை அனுஷ்காவின் இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.