FOLLOW US

ON GOOGLE DISCOVER

காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

மீண்டும் இணையத்தில் வெளியானது ஜன நாயகன் திரைப்படம்!

இணைய தளங்களில் வெளியானது ஜன நாயகன்....

News image

ஜன நாயகன் விஜய்

Updated On :23 ஜூலை 2026, 6:24 pm IST

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியானது.

முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக ஜன நாயகன் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. முதல்வராக பதவியேற்றதால் படத்தில் விஜய் பெயர் இடம்பெறும் டைட்டில் கார்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் எனப் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1000 திரைகளுக்கு மேல், உலகளவில் 3000க்கும் அதிகமாக திரைகள் என பிரம்மாண்ட வெளியீட்டைக் கண்டுள்ளது. மேலும், தமிழகம் உள்பட பல பகுதிகளிலும் டிக்கெட் விற்பனைகள் மிகத் தீவிரமாக நடைபெற்றதால் முதல் நாள் வசூலாக இப்படம் ரூ. 160 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் இணைய தளங்களில் வெளியானது போல், தற்போது மீண்டும் அதன் திரையரங்க வடிவம் இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், ரசிகர்கள் முதல்வர் திரைப்படத்தையே சட்ட விரோதமாக இணையத்தில் பதிவேற்றுகிறார்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Vijay's film Jananayagan has been released online again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.