பாகுபலி2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கினார். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் தயாரித்தது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்தார்கள். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடித்தார்கள்.
உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்தது. ஆர்ஆர்ஆர் 2-ம் பாகத்தின் கதையைத் தனது தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி வருவதாகக் கடந்த செப்டம்பர் மாதம் உறுதி செய்தார் இயக்குநர் ராஜமெளலி.
தி டெர்மினேட்டர், ட்ரூ லைஸ், டைட்டானில், அவதார், அவதார் 2 போன்ற உலகளவில் வசூலைக் குவித்த படங்களை இயக்கியவர் ஜேம்ஸ் கேம்ரூன். கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படமான ஆர்ஆர்ஆர்-ஐ ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி பேசியிருந்தார்.
இந்நிலையில் ஜேம்ஸ் கேமரூன் ராஜமௌலி பேசியது பேசிய விடியோ வெளியாகியுள்ளது.
“டெர்மினேட்டர் முதல் டைட்டானிக் வரை உங்களது எல்லாப் படங்கள் மிகவும் பிடிக்கும்” என ராஜமௌலி கூறினார்.
“உங்களது படங்களின் கதாபாத்திரங்களை பார்க்கும்போது உணர்ச்சி மிகுந்ததாக உள்ளது. நெருப்பு, நீர் என நீங்கள் படத்தினை சரியாக செட் அப் செய்துள்ளீர்கள். ஹீரோ என்ன செய்கிறார், ஏன் செய்கிறார் என கொஞ்சம் கொஞ்சமாக ரிவீல் செய்கிறீர்கள். ட்விஸ்ட் மற்றும் நண்பர்களுக்குள்ளானது என அனைத்துமே நன்றாக இருந்தது” என கேம்ரூன் கூறினார். இதற்கு ராஜமௌலி விருதை விடவும் இந்த வார்த்தைகள் மிகவும் பெரியது எனக் கூறினார்.
படம் பிடித்துப் போகவே 2 முறை பார்த்துள்ளார். படம் எடுக்க எவ்வளவு நாள் ஆனது என கேம்ரூன் கேட்க 320 நாட்கள் ஆனதாக ராஜமௌலி தெரிவித்தார். “நீங்கள் உலகத்திலே டாப்” என கேம்ரூன் கூறினார்.
பின்னர் இறுதியாக, “இங்கே (ஹாலிவுட்டில்) படம் எடுக்க வேண்டுமானால் சொல்லுங்கள் பேசலாம்” என கேமரூன் கூறியுள்ளார்.
"If you ever wanna make a movie over here, let's talk"- #JamesCameron to #SSRajamouli.
â RRR Movie (@RRRMovie) January 21, 2023
Hereâs the longer version of the two legendary directors talking to each other. #RRRMovie pic.twitter.com/q0COMnyyg2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியார் பெயரில் கோயிலின் ரூ.100 கோடி நிலம்: ஊழலில் பின்னால் இருக்கும் பவர்சென்டர் யார்? - இபிஎஸ் கேள்வி!







