குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சனிக்கிழமையும் ஒளிபரப்பாகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்!

ரசிகர்களிடம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்து சனிக்கிழமையிலும் சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Published On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடர் சனிக்கிழமையும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 29ஆம் தேதி முதல் சனிக்கிழமையும் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பாகவுள்ளது. இதன்மூலம், விஜய் தொலைக்காட்சியில் சனிக்கிழமையும் ஒளிபரப்பாகும் தொடர்களின் பட்டியலில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது. அதற்கேற்ப திரைக்கதைகளையும் அமைத்து வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடருக்கும் எல்லா வயதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

Story image

இந்தத் தொடரில் கோமதி பிரியா, வெற்றி வசந்த் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். குரு சம்பத்குமார் திரைக்கதை எழுத எஸ். குமரன் இயக்குகிறார். 

கடந்த ஜனவரி மாதம்முதல் இரவு 9.30 மணிக்கு சிறகடிக்க ஆசை தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்தத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பப்பட்டு வந்தது. ரசிகர்களிடம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்து சனிக்கிழமையிலும் சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.