25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

என் குடும்பம்தான் எனக்கு எல்லாம்! கயல் நாயகிக்கு குவியும் வாழ்த்து!!

சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் கயல் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

Published On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

கயல் தொடரில் நடித்துவரும் நடிகை சைத்ரா ரெட்டி தனது பிறந்தநாள் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையைச் சேர்ந்த பலரையும் கயல் தொடர் கவர்ந்துள்ளது. 

இதனால், சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் கயல் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்தத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவருபவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் நடித்தவர். 

Story image

அந்தத் தொடரில் எதிர்மறை (வில்லி) பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது கயல் தொடரின் மூலம் நாயகியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். 

இவருக்கு சமூகவலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வருகிறார். 

Story image

சமீபத்தில் சைத்ரா ரெட்டி தனது, 28வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதன் புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார். அதில், என் குடும்பம்தான் எனக்கு எல்லாமே. அதைத் தாண்டி சொல்ல எதுவும் இல்லை எனப் பதிவிட்டுள்ளார். 

சைத்ரா ரெட்டியின் பிறந்தநாளுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.